பாபரி மஸ்ஜிதின் ஆரம்ப கால வரலாற்றையும் இந்திய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோர்களுடைய காலத்தில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் தொடர்பான நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்கள்.
தற்போதுள்ள வழக்கின் நிலையையும் துபை சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அதன் பிறகு சகோதரர்கள் கேட்ட சமுதாயம் மற்றும் பொதுப்பிரச்சனைகள் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள். ஒன்றரை மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்ற அமர்வில் பெருந்திரலான சகோதரர்கள் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான கேள்விகளை ஆர்வமுடன்
கேட்டார்கள். இது போன்ற அமர்வுகள் மாதம் ஒரு முறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று துபை முமுக நிர்வாகிகளை கலந்துகொண்ட சகோதரர்கள் அன்புடன் வலியுறுத்தி சென்றார்கள்.
No comments :
Post a Comment