Thursday, May 7, 2015

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2015 இல் தேர்வு நடைபெற்ற 121 பள்ளிகளில் மொத்தம் 14,844 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,051 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவீதம் 94.66 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 2014ல் தேர்ச்சி சதவீதம் 93.06 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.6 விழுக்காடு தேர்ச்சி அதிகரித்துள்ளது.

10 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
________________________________________

இராமநதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும,; 28 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் மற்றும் 29 மெட்ரிக் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என மாவட்டத்தில் மொத்தம் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக பயின்று 1172 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் நேஷனல் அகடாமி மாண்டிஸோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுருதி முதலிடத்தையும், 1170 மதிப்பெண்களைப் பெற்ற இராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி எம்.மகேஷ்வரி இரண்டாம் இடத்தையும், 1168 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் ஜி.பிரகதீஷ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவ மணிகள் சாதனை
______________________________________________________

அரசு பள்ளிகளில் இராமநாதபுரம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி என்.தங்கவேல் என்பார் 1120 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், பனைக்குளம் அரசு மகளிர் பள்ளியைச் சார்ந்த மாணவி எ.சம்சூல் ஹத்தியா மற்றும் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் எ.பழனிமுருகன் ஆகியோர் 1111 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் என்.பிரேம் சந்த் என்பார் 1110 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

வெற்றிப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இவர்கள் சாதனை பின் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அரசு பள்ளிகளை இரண்டாம் தரமாக கருதுவோரை வாயடைக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மணிகள் சாதனை புரிய பெரிதும் உழைத்த அரசு பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மணிகள் அனைவரும் எனது இராமநாதபுரம் தொகுதியைச் சேரந்த்வர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பிற்கு பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து செயல் திட்டமும் தீட்டி செயல்படும் இராமளநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் இ.அ.ப. அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




இப்படிக்கு 
ஜவாஹிருல்லாஹ் 

Friday, May 1, 2015

மனிதநேய மக்கள் கட்சியின் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வருவோர்கள் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வருவோர்கள் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.-
எம். தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
1. வடசென்னை - எஸ்.ஏ. அஸீம் (90943 47818)
2. மத்திய சென்னை - இ.எம். ரசூல் (94441 04381)
3. தென் சென்னை - அஹமது அலி ஜின்னா (99405 11973)
4. திருவள்ளூர் மேற்கு - ஏ. முகம்மது நாசர் (98409 88202)
5. காஞ்சி தெற்கு - யு. ரஹ்மத்துல்லாஹ் (98403 67102)
6. காஞ்சி வடக்கு - ஜே. சலீம் கான் (97103 36277)
7. திருவண்ணாமலை - ஏ. நஸீர் அகமது (98433 85170)
8. தர்மபுரி - சி. ஷயின்ஷா (94430 83782)
9. சேலம் கிழக்கு - எஸ்.ஆர். இமாம் முகைதீன் (94432 59786)
10. சேலம் மேற்கு - எஸ். அம்ஜத் (90039 34775)
11. விழுப்புரம் வடக்கு - எம். பாரூக் (99447 38870)
12. கடலூர் தெற்கு - ஏ. யாசர் அரபாத் (94436 42614)
13. சிவகங்கை - எஸ். அப்துல் மஜீது (99658 91602)
14. ஈரோடு மேற்கு - ஏ.கே. ஷாநவாஸ் (98420 98744)
15. ஈரோடு கிழக்கு - அமீர் (95009 07033)
16. திருச்சி தெற்கு - எம். பைஸ் அகமது (99446 88886)
17. தஞ்சை தெற்கு - எம். அஹமது கபீர் (77080 05173)
18. திருவாரூர் - பி.எம்.ஏ. சீனி ஜெகபர் சாதிக் (98425 89222)
19. புதுக்கோட்டை கிழக்கு - ஏ. அபுசாலிஹ் (98651 37686)
20. புதுக்கோட்டை மேற்கு - எம். ரஹீம் தாலிப் (98425 64009)
21. இராமநாதபுரம் கிழக்கு - பி. அன்வர் அலி (98948 87511)
22. இராமநாதபுரம் மேற்கு - எஸ். முகம்மது இக்பால் (94426 79419)
23. கோவை வடக்கு - ஏ. சாதிக் அலி (கவுன்சிலர்) (99947 51124)
24. திருப்பூர் வடக்கு - எம்.ஜே. அபுசாலிஹ் (97515 87037)
25. திருப்பூர் தெற்கு - பல்லடம் பீர்முகம்மது (78713 11190)
26. திண்டுக்கல் - ஜே. முகம்மது இப்ராஹிம் (99527 71684)
27. விருதுநகர் - ஐ. அஜ்மீர் கான் (94448 48551)
28. மதுரை வடக்கு - கே. பக்ருதீன் அலி அஹ்மது (94439 77182)
29. மதுரை தெற்கு - நூருல் ஹக் (95426 93889)
30. நெல்லை மேற்கு - ஏ. நெய்னா முகம்மது (9443 41411)
31. நெல்லை கிழக்கு - மில்லத் இஸ்மாயில் (96007 07007)
32. கன்னியாகுமரி - முகம்மது உவைஸ் (94423 03163)
33. காரைக்கால் - எம். நெய்னா முகம்மது (99407 55317)
34. புதுச்சேரி - என்.எஸ்.கே. அப்துல் சமது (89401 84100)
35. கரூர் - பி.ஆர்.எஸ். அபுதாஹிர் (99527 89385)
36. கடலூர் வடக்கு - எம். மதார்ஷா (98942 79457)
37. தஞ்சை வடக்கு - ஏ. மஹ்மூது மஹ்ரூப் (95246 68076)
38. அரியலூர் - ஜே. மன்சூர் அலி (98437 02400)
39. பெரம்பலு£ர் - எம். சுல்தான் மெய்தீன் (98404 42250)
40. நாமக்கல் - ஏ.எஸ். பகுருதீன் (98655 37374)
41. நாகை வடக்கு - ஓ.எம்.ஏ. முசாவுதீன் (94430 18347)
42. நாகை தெற்கு - என். செய்யது முபாரக் (98427 83292)
43. நீலகிரி - ஏ. அபுதாஹிர் (90471 74281)
44. வேலூர் கிழக்கு - கே.என். சதக்கத்துல்லாஹ் (எ) பாபு (94423 14727)
பட்டியல் தொடரும்...

நியூஸ் : www.tmmk.in 

Thursday, April 30, 2015

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மமக செயலாளராக அன்வர் அலி

மனிதநேய மக்கள் கட்சி தலைமையால் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளராக;B.அன்வர் அலி அவர்கள் நியமனம்....இவரின் சேவை தொடர ஏன்னுடைய துஆக்களுடன் வாழ்த்துக்கள்

Saturday, April 25, 2015

நேபாள மக்களின் துன்பத்தில் பங்கேற்கிறோம்! மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று (25.04.2015) நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏராளமனோர் பலியாகியும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதும் பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நேபாள மக்களின் துயரத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கிறது.
இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரும் துயரில் சிக்கியிருக்கும் நேபாள மக்களுக்கு இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(எம். தமிமுன் அன்சாரி)

Monday, April 20, 2015

தமுமுக சர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரிக்கை!

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர்:M.சாதிக் பாட்சா அவர்கள் இராமநாதபுரம் கீழக்கரை(ரயில்வே சாலை)நெடுஞ்சாலைக்கு கீழக்கரை சமுதாய வள்ளல் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பெயர் வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக சர்பாக கேரிக்கை வைத்தார்கள்....

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு கமிசன் தொகை உயர்வு: மோடி அரசிற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

துபாய் வருகை தந்த மமக சட்டமன்ற தலைவர் ஜவஹிருல்லாஹ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தங்களது வீடு வாசல் குடும்பம் தாய் நாட்டை பிரிந்து தியாகம் செய்து கடுமையாக உழைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பு பணத்திற்க்கான கமிசன் தொகையை மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குறியது. 
இதனால் வெளிநாட்டில் பணி புரியும் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் சிறிய தொகைதானே என்கிறார்கள் ஆனால் ஏழை தொழிலாளர்களின் மாத வருமானத்தை ஒப்பிடும்போது பெரும் தொகையாகும்.2016ல் இன்னும் உயரும் என சொல்கிறார்கள்.
உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை பற்றி பேசும் மோடி அரசாங்கம்தான் மற்றொரு புறம் இது போன்ற‌ வேலையை செய்கிறது.
மேலும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் குறிப்பாக தமிழர்கள் இறந்து விட்டால் அவர்களின் உடலை தாயகம் எடுத்து வருவதற்கும் ,உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உதவுவதற்கும் இன்னும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ளிநாட்டு வாழ் தமிழர் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலச் சட்டம், 2011ல் நிறைவேற்றப்பட்டது. 
இதன்படி, வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக, தனி நிதியம் உருவாக்க வழி செய்யப்பட்டு. வாரியம் ஒன்றை உருவாக்கவும், சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் இது வரை இச்சட்டம் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடத்துவது குறித்து எங்கள் கட்சி சார்பாக ஆலோசிக்கபடும்.
கடல் அட்டைக்கு தடை விதித்தது அப்போதைய மத்திய திமுக அமைச்சராக இருந்த டி ஆர் பாலுவின் தவறாகும் உலகின் பல்வேறு நாடுகளில் கடல் அட்டைக்கு தடையில்லை லட்சக்கணக்கில் பெருகும் இனமான‌ கடல் அட்டை அழியும் இனமல்ல ஆனால் இதனை பிடிப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் ,கீழக்கரை, மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவர்களை கைது செய்வது கண்டிக்கதக்கது. 
தடையை நீக்குவது குறித்து அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் ஆனால் எவ்வித பயனும் இல்லை. வன உயிரனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசாங்கம் மனித உயிர்களை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை காட்டு பன்றியை கொன்றால் ஜெயில்லில் தள்ளுகிறார்கள் ஆனால் ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றுள்ளார்கள்
நெஞ்சை உருக்கும் இச்சம்பவத்திற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை கேள்வியும் இல்லை கேட்பாறும் இல்லை .அனைத்தையும் பேஸ்புக்கிலும் ,டிவீட்டரிலும் பதிவு செய்யும் பிரதமர் மோடி ஏன் இந்த படுகொலை குறித்து ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை
இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரதமரை கண்டதில்லை.கோட் அணியவே கோடிக்கணக்கில் செலவழிக்கிகிறார் தன்னை முன்னிலை படுத்துவதில் மோடிக்கு நிகர் மோடிதான் அதில் ஒன்றுதான் தன்னுடைய பெயரை தன் தன் சட்டையில் பதித்தது இது போன்று முன்னாள் எகிப்த் அதிபர் முபாரக் என்பவரும் செய்துள்ளார். 
தற்போதை மோடி அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு எதிரான அரசாங்கம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த ஏழைகளுக்கு உதவும் திட்டமான‌ 100 நாள் வேலை வாய்ப்பை ரத்து செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள். 
ஆந்திராவில் சுட்டுகொல்லப்பட்ட திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவிற்கு சென்றதற்கு முக்கிய காரணம் இது போன்ற திட்டத்தை ரத்து செய்தததால்தான் ஏற்பட்ட வேலை இல்லா நிலை என்பதை உண்மை அறியும் குழுவில் இடம்பெற்ற நான் அறிந்தேன்
அதே போன்று பேசுவது ஒன்று செயல்படுத்துவது வேறொன்று மோடி அவர்கள் வெளிநாடுகளில் மதசார்பின்மை பற்றி பேசுகிறார் ஆனால் இங்கே அவரது கட்சியை சார்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். 
மோடி ஏன் இதனை கண்டிக்கவில்லை .தற்போதையை மோடி அரசில் பெரும் கோடிஸ்வரார்கள் மாபெரும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் ஆனால் ஏழை எளிவர்கள் பரம ஏழைகளாக‌ வறுமையில் உழல்கிறார்கள் ஏழைகளை வறுமையில் ஆழ்த்தும் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
அதில் ஒன்று நிலம் கையகப்படுத்தும் சட்டம் தமிழக அரசாங்கத்தின் செயல்பாடு ஓரளவிற்கு திருப்தி அளிக்கிறது. எஸ் பி பட்டிணம் வாலிபர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக போலீஸ் எஸ் ஐ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.
அதே போன்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஸ்ணமூர்த்தி இவரை போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்தவர்கள் யாருமில்லை ஆனாலும் அவர் மீது எவ்வித பாரபட்சமும் இல்லாமல் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
அத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடு