Friday, April 3, 2015

தமிழக மீனவர் பிரச்னை - இலங்கையின் மிரட்டலுக்கு மோடி அரசின் மெத்தனமே காரணம்

தமிழக மீனவர் பிரச்னை - இலங்கையின் மிரட்டலுக்கு மோடி அரசின் மெத்தனமே காரணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
தமிழக, இலங்கை மீனவர்களிடையே சென்னையில் கடந்த மார்ச் 24ம் தேதி மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்கள் சார்பில், ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை கோரியிருந்தனர். இந்த கோரிக்கை குறித்து இலங்கை மீனவர்கள் இலங்கை அதிபரிடம் ஆலோசித்து விட்டு அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தனர்.
கொழும்புவில் மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, "இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்குமாறு கடற்படைக்கு உத்தரடிவிட்டுள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தலை நிறுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனாவின் இத்தகைய அறிவிப்பு மிகவும் கண்டனத்திற்குரியது, இப்பிரச்சினையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என உலகத்தில் எந்த பிரதமரோ, அதிபரோ சொல்லாத கூற்றை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வலிமையான பிரதமர் என்று சொல்லப்படுகின்ற மோடி, ரனில் விக்ரம சிங்கேவின் பேச்சுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்காதது தான் தற்போது தமிழக மீனவர்களின் பராம்பரிய மீன்பிடி உரிமையை மறுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி உள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை மீனவர்களுக்குகென இந்திய கடல் பகுதியில் உள்ள பர்ஜூ பேங்க் இலங்கைக்கு குத்தக்கைக்கு விட்டதுபோல், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களுக்குகென ஒரு பகுதியை குத்தக்கைக்கு எடுக்க வேண்டும்.
மேலும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிர்மூலமாக்கும் வகையில் அந்நிய நாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதி அளிக்கக்கோரும் மீனா குமரி அறிக்கையினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(ஒ-ம்)எம்.எச்.ஜவாஹிருல்லா

சாலை விபத்தில் மார்க்க அறிஞர்கள் 9 பேர் உயிரிழப்பு : தமுமுக ஆழ்ந்த இரங்கல்


Wednesday, March 25, 2015

பிஜெபி சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து இன்று மாபெரும் கண்டன அறப்போர் இராமநாதபுரத்தில் இன்று மாலை நடைபெற்றது





இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் மதவெறிப்பேச்சு பேசிய பிஜெபி சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து இன்று மாபெரும் கண்டன அறப்போர் இராமநாதபுரத்தில் இன்று மாலை நடைபெற்றது

Friday, March 20, 2015

இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட செயலாளராக

த.மு.மு.க வின் இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட செயலாளராக Thondi Sathik Batcha சாதிக் பாஷா  அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!!

Wednesday, March 18, 2015

தமுமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

தமுமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

17/03/2015 அன்று தலைமை நிர்வாகக் குழுவில் மாவட்டச் செயலாளர்களின் நியமனம் நடைபெற்றது அதனடிப்படையில் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வடசென்னை:
எப்.உஸ்மான் அலி
மத்திய சென்னை:
எல்.தாஹா நவீன்
தென் சென்னை:
முஹம்மது கோரி
காஞ்சி வடக்கு:
எம்.யாக்கூப்
வேலூர் மேற்கு:
ஆம்பூர் நசீர் அஹமது
திருவண்ணாமலை:
எம்.ஜமால்
விழுப்புரம் வடக்கு:
எம்.ஒய்.முஸ்தாக்தீன்
கடலூர் வடக்கு:
பி.ஷாஜஹான்
சிவகங்கை:
கே.ஏ. முஹம்மது ஸைபுல்லாஹ்
ஈரோடு மேற்கு:
என்.எஸ். ஷம்சுதீன்
கோவை மாநகர்:
இ.அஹமது கபீர்
தூத்துக்குடி தெற்கு:
ஏ.மைதீன் அசன் யூசுப்
நெல்லை மேற்கு:
எஸ்.மைதீன் சேட்கான்
நெல்லை கிழக்கு:
அப்பாஸ் ஹில்மி
காரைக்கால்:
ஐ.அப்துல் ரஹீம்
தலைமையகம், தமுமுக

Saturday, March 7, 2015

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் வேலூரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுவில்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மவ்லவி ஜே.எஸ். ரிபாயி

பொதுச் செயலாளராக ப. அப்துஸ் ஸமது

பொருளாளராக வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்சுதீன்
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாகிகள் மிகுந்த எழுச்சியுடன் செயல்பட்டு தமுமுகவை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல வல்ல இறைவன் கிருபை செய்ய பிராத்திக்கிறேன். இவர்களின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் செழுமையாக நிலைநாட்டப்பட இறைவன் கிருபை செய்வானாக.