

துபை மண்டல தமுமுக சார்பாக இவ்வாரம் ஜும்மா தினத்திற்கான நோட்டிஸ்
தென்காசி: 27.12.2010 தமிழக சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.
தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசியில் நிருபர்களிடம் பேசுகையில்,
முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு செல்ல ரிங் ரோடு சரியாக இல்லை. தென்காசி மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.
தற்போது வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி அமைக்க முன்வந்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதியாக 25 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். அதில் கடையநல்லூர், பாளை தொகுதிகளும் அடங்கும்.
ஆனால் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகள் என்பது கூட்டணி தலைமைதான் முடிவு செய்யும் என்றார் அவர்.
திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூரில் (26.12.2010) அன்று தமுமுகவின் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் எம். பீர் மைன் தலைமை தாங்கினார்.
தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர் நயினார் முகம்மது, மாவட்டப் பொருளாளர் சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊராகும். இந்தப் பகுதியை சில சமூகவிரோதிகள் விபச்சார பகுதியாக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க பள்ளப்பட்டி மக்கள் காத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளப்பட்டி அதிமுக நகர செயலாளர் அபுதாஹிர், ஒரு குடும்பப் பெண்ணுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்தது நேரடியாக பெண் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண் வீட்டாரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 12.12.2010 இரவு சுமார் 9 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்த போது, தகாத உறவுக்காக (விபச்சாரத்திற்காக) அதிமுக நகர செயலாளருக்காக வந்ததாக ஒப்புக் கொண்டனர். மேலும் ஷாஜஹான், கண்ணன் ஆகியோர்தான் தங்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினர் என்றும் கூறியுள்ளனர்.
இதில் ஷாஜஹான் என்ற நபர் தற்போது ஊரில் இல்லாத நிலையில் பொதுமக்களின் கோபம் கண்ணன் மேல் திரும்பியது. கண்ணன் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர். இவர் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே ‘கௌரி மெஸ்’ என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறார். கடையின் பின்புறம் கண்ணனின் குடும்பம் உள்ளது.
பொதுமக்கள் கண்ணனின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவரும், சமுதாய நலன் விரும்பிகளும் அவர்களைத் தடுத்துள்ளனர். இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் கண்ணனைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
மறுதினம் 13.12.2010 அன்று இது சம்பந்தமாக, பள்ளப்பட்டி உலமாக்கள் சபை மற்றும் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அழைப் பின் பேரில் அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், தவறான பாதையில் பிடிபட்ட பெண்களை ஜமாஅத் மூலமாக நடவடிக்கை எடுப்பது என்றும், அந்தப் பெண்களிடம் தகாத நட்பை வைத்திருந்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கும் போதே பொதுமக்களில் சிலர் அதிமுக நகர செயலாளர் அபுதாஹிரின் மருந்துக்கடையையும், அதன் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது அத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்த முஹம்மது ஹக்கீம், இக்பால் ஆகிய இரண்டு தமுமுக உறுப்பினர்களை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.
இத்தகவல் அறிந்தவுடன் தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையம் சென்றனர். அங்கு ஆய்வாளர் இல்லாத நிலையில் அவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு தமுமுக உறுப்பினர்களை விடுவிக்கும்படி வலியுறுத்தினர். இரண்டு பேரையும் விசார ணைக்காக அழைத்து வந்ததாகவும், அவர்களை விடுவித்து விடுவோம் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் போலீசார் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து ஐந்து பேரை பிடித்துச் சென்றனர். மேலும் பலரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.
இதையடுத்து பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் கரூர் மாவட்ட தமுமுக பொறுப் பாளரும் மாநில துணைச் செயலாளருமான கோவை சாதிக் அவர்களை தொடர்பு கொண்டு சம்பவங்கள் குறித்து விரிவாகக் கூறினர். மாநில துணைச் செயலாளர், பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.
திவிரவாதிகள் தாக்குதலில் இருந்து போலீசார் எவ்வாறு பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து திண்டுக்கல்லில் போலீசார் ஒத்திகை நடத்தும் நிகழ்ச்சி டிசம்பர் 09, 2010 அன்று நடந்தது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது போலவும், தபால் நிலையத்தில் பதுங்கிக் கொள்வது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதி களாக சித்தரிக்கப்பட்டவர்கள் தாடி வைத்த முஸ்லிம்கள் போன்ற தோற்றத்தை போலீசார் அமைத்திருந்தனர். இந்த செய்தி மறுதினம் புகைப்படத்துடன் வெளிவந்தது. புகைப்படத்தைப் பார்த்த முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாயினர். போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி தங்களை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, திண்டுக்கல் பேகம்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்தவர்கர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
உயர் அதிகாரிகள் வருத்தம்
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், முருகன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட வில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்.சிவானந்தம், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் வந்து சமரசம் செய்தனர். இறுதியில் போலீஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மதுரை செல்லும் வாகனங் கள், திண்டுக்கல்லுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியல் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங் கியது.
தமிழக காவல்துறையின் இந்த செயலுக்கு தமுமுக தலைவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது..
“தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல் துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டை யாடுவதாக போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதி களைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந் துள்ளது.
போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதி களுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்தரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர் களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பது போல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்கச் செய்து பத்திரிகை களில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர் வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந் தப் படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக் கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்ப தாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?
தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம் களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள் ளதற்கு தமுமுக வன்மையான கண்டனத் தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.”மேற்கண்டவாறு தனது அறிக்கையில் தமுமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?
திருப்பூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாக கூட்டம், மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அன்சார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு கோம்பைத்தோட்டம், சொர்ணபுரி லே-அவுட் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில், சாக்கடை கால்வாய், சாலை பணிகள் துவங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். "அனைத்துக்கட்சி கூட்டங்களில் சிறுபான்மையினரை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நெருங்க உள்ள நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணை தலைவராக பஷீர், துணை செயலாளராக சாதிக், மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளராக மீரான் நியமிக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் இக்பால் நன்றி கூறினார்.
Source: Dinamalar
கடந்த மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Source: inneram
ப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Source: inneram
ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது.கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் த.மு.மு.க., சார்பில் புதிய ஆம்புலன்சை பொதுமக்களுக்காக வாங்கி அதன் அர்ப்பணிப்பு விழா நடந்தது.
பொட்டல்புதூரில் நடந்த விழாவிற்கு த.மு.மு.க., கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார்.
ஷாபி ஜமாத் தலைவர் முகமதுஅலி, ஜமாத் தலைவர் முகமதுகனி, கிளை பொருளாளர் மதார்கனிலெப்பை, துணை செயலாளர் முகமதுகான், மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ராஜாஜி, கிளை பொருளாளர் காஜாமைதீன், ஒன்றிய பேச்சாளர் ஈசாக் அலி, த.மு.மு.க., கிளை தலைவர்கள் வீராசமுத்திரம் நாகூர்கனி, சம்பன்குளம் அப்துல்ரகுமான், முதலியார்பட்டி பாசூல்அஷ்ரப் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் நம்பிராஜன், பழனிக்குமார், கடையம் வட்டார மோட்டார் வாகன சங்க தலைவர் முருகேசன், பொட்டல்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் செய்யது மசூது, பொருளாளர் அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
மாநில பொது செயலாளர் ஹைதர்அலி, மாநில செயலாளர் கோவை செய்யது பேசினர்.புதிய ஆம்புலன்ஸ்க்கான சாவியை த.மு.மு.க., மாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி கிளை தலைவர் முகமதுஅலிஜின்னாவிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி, மாவட்ட துணை செயலாளர் சர்தார்அலிகான், கடையம் ஒன்றிய செயலாளர் காஜாஅலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்சேட்கான், மாவட்ட பொருளாளர் ரசூல்மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் நயினார்முகமது, சுல்தான்மைதீன், கடையம் ஒன்றிய செயலாளர் மீரான்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிளை செயலாளர் ஆட்டோ சித்திக் நன்றி கூறினார். பொதுமக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு 99445 09050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என த.மு.மு.க.,வினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.