05.06.2015 அன்று தமுமுக கீழக்கரை நகர் கீழை சார்பாக கீழக்கரை முஸ்லிம் பஜார் தெருவில் தெருமுனை பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டதில் அண்ணன் சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை சகோ.B.அன்வர் அலி அவர்கள் (மமக மாவட்ட செயலாளர்) ராமநாதபுரம் (கிழக்கு) மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நகர் செயலாளர் வெஸ்ட் ஆசியா சிராஜு மற்றும் நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முனதாக சிவகாசி முஸ்தபா , அவர்கள் கழக கொடியே ஏற்றி வைத்தார்கள் .
Saturday, June 6, 2015
Tuesday, June 2, 2015
பர்மா மியான்மர் முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் பர்மா மியான்மர் முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ! !
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) சார்பில் இன்று 02-06-2015 மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில், தமுமுக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சாதிக் பாட்சா அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோ.கோவை ஜாஹிர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
அதில் பர்மா மியான்மர் ரோஹிங்கியாவில் பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுவர்,சிறுமியர், முதியோர், பெண்கள் என அனைத்து முஸ்லிம் மக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்யும் பர்மா மியான்மர் பவுத்த அரசு மற்றும் பௌத்த வெறியர்களை கண்டித்தும்,
ஐ.நா.சபை இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரியும், இதை உலக அரங்கில் கை கட்டி வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள் உடனடியாக குரல் எழுப்பக்கோரியும்,
தட்டிக்கேட்க சக்தி இருந்தும் சத்தமில்லாமல் ஆட்சி செய்யும் மத்திய அரசை இந்திய மக்களின் கண்டனத்தை பதிவு செய்யக்கோரியும் கண்டனக்குரல் எழுப்பப்பட்டது.
மேலும் கண்டனக்குரல் எழுப்பியவர்கள் சகோ.A.முஹம்மது சித்திக் அவர்கள் (தமுமுக தென் கிழக்கு மண்டல தேர்தல் அதிகாரி), சகோ.S.முருக பூபதி மாவட்ட துணை செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சகோ.டாக்டர்.S.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் தேவிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் மமக.
இந்த நிகழ்வை தமுமுக மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் சகோ.ஹனீப் ரஷாதி அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்து வைத்தார்கள்.
முன்னிலை சகோ.B.அன்வர் அலி அவர்கள் (மமக மாவட்ட செயலாளர்) ராமநாதபுரம் (கிழக்கு) சகோ.S.M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தமுமுக மாவட்ட பொருளாளர், சகோ.S.சுல்த்தான் அவர்கள் தமுமுக மாவட்ட துணை செயலாளர், சகோ.M.ரைஸ் இப்ராஹீம் அவர்கள் தமுமுக மாவட்ட துணை செயலாளர், சகோ.A.செய்யது காசீம் அவர்கள் தமுமுக மாவட்ட துணை செயலாளார்
இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நன்றியுரை : சகோ.M.நஸ்ருத்தீன் (எ) பிஸ்மி அவர்கள் தமுமுக ராமநாதபுரம் நகர் செயலாளர்.
Monday, May 18, 2015
Saturday, May 16, 2015
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு
மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மண்டபம் ஒன்றியம், வழுதூர் ஊராட்சி , வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரூபாய்.17.14 பதினேழு லட்சத்து பதினான்கு ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், வழுதூர் ஊராட்சி , வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களின் வசதிகளுக்காக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வந்தது.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் DrM.H.ஜவாஹிருல்லா MBA.,M.Phil.,PhD.,MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2013 - 2014 ம் ஆண்டின் கீழ்மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 17.14 பதினேழு லட்சத்து பதிநான்காயிரம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டிருந்தது.
அப்பணிகள் நிறைவுற்று ஊர் மக்கள் முன்னிலையில் புதிய பேவர் பிளாக் சாலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.மேலும் ஊர் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் புதிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது .ராமநாதபுரம்:வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாந்தரவை மக்கள் உடல் நலம் பாதிப்பின்போது 10 கி.மீ., தூரமுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, 17 கி.மீ.,தூரமுள்ள புதுமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.இங்குள்ள துணை சுகாதார நிலையம், புதன்கிழமை மட்டும் செயல்படுகிறது.
நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது. குயவன்குடி, தெற்குவாணி வீதி, வாலாந்தரவை துணை சுகாதார நிலையங்களை ஒன்றிணைத்து வாலாந்தரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.சுகாதார நிலையம் கட்ட ஓ.என்.ஜி.சி., நிறுவனம், தனியார் தொழிற்சாலைகள் நிதி வழங்க முன் வந்தன. இதையடுத்து ஊருக்கு நடுவே, ஒரு ஏக்கரில் பொதுமக்கள் சார்பில் இனாமாக நிலம் வழங்கப்பட்டது.ரூ.15 லட்சத்தில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஊராட்சித் தலைவர் முனியாண்டி அவர்கள் கூறும்போது ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நோய் பாதிப்பின்போது சிகிச்சைக்கு ரெகுநாதபுரம், புதுமடம்,ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இங்கு ஓ.என்.ஜி.சி., தொழிற்சாலைகள் பங்களிப்புடன் அமையும் சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றார் .இதன் தொடர்ச்சியாக இன்று வாலாந்தரவைக்கு புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்வுக்கு வந்திருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் புதிதாக கட்டப்பட்டும் மருத்துவமனையை தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்திடக்கோரி கிராமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என கூறினார்கள்.இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட, ஒன்றிய , கிளை நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது. குயவன்குடி, தெற்குவாணி வீதி, வாலாந்தரவை துணை சுகாதார நிலையங்களை ஒன்றிணைத்து வாலாந்தரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.சுகாதார நிலையம் கட்ட ஓ.என்.ஜி.சி., நிறுவனம், தனியார் தொழிற்சாலைகள் நிதி வழங்க முன் வந்தன. இதையடுத்து ஊருக்கு நடுவே, ஒரு ஏக்கரில் பொதுமக்கள் சார்பில் இனாமாக நிலம் வழங்கப்பட்டது.ரூ.15 லட்சத்தில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஊராட்சித் தலைவர் முனியாண்டி அவர்கள் கூறும்போது ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நோய் பாதிப்பின்போது சிகிச்சைக்கு ரெகுநாதபுரம், புதுமடம்,ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இங்கு ஓ.என்.ஜி.சி., தொழிற்சாலைகள் பங்களிப்புடன் அமையும் சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றார் .இதன் தொடர்ச்சியாக இன்று வாலாந்தரவைக்கு புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்வுக்கு வந்திருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் புதிதாக கட்டப்பட்டும் மருத்துவமனையை தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்திடக்கோரி கிராமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என கூறினார்கள்.இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட, ஒன்றிய , கிளை நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நகரில் மனிதநேய மக்கள் கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை
Thursday, May 7, 2015
இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2015 இல் தேர்வு நடைபெற்ற 121 பள்ளிகளில் மொத்தம் 14,844 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,051 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 94.66 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 2014ல் தேர்ச்சி சதவீதம் 93.06 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.6 விழுக்காடு தேர்ச்சி அதிகரித்துள்ளது.
10 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
__________________________ ______________
இராமநதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும,; 28 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் மற்றும் 29 மெட்ரிக் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என மாவட்டத்தில் மொத்தம் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக பயின்று 1172 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் நேஷனல் அகடாமி மாண்டிஸோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுருதி முதலிடத்தையும், 1170 மதிப்பெண்களைப் பெற்ற இராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி எம்.மகேஷ்வரி இரண்டாம் இடத்தையும், 1168 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் ஜி.பிரகதீஷ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவ மணிகள் சாதனை
__________________________ __________________________ __
அரசு பள்ளிகளில் இராமநாதபுரம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி என்.தங்கவேல் என்பார் 1120 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், பனைக்குளம் அரசு மகளிர் பள்ளியைச் சார்ந்த மாணவி எ.சம்சூல் ஹத்தியா மற்றும் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் எ.பழனிமுருகன் ஆகியோர் 1111 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் என்.பிரேம் சந்த் என்பார் 1110 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
வெற்றிப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இவர்கள் சாதனை பின் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
அரசு பள்ளிகளை இரண்டாம் தரமாக கருதுவோரை வாயடைக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மணிகள் சாதனை புரிய பெரிதும் உழைத்த அரசு பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மணிகள் அனைவரும் எனது இராமநாதபுரம் தொகுதியைச் சேரந்த்வர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பிற்கு பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து செயல் திட்டமும் தீட்டி செயல்படும் இராமளநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் இ.அ.ப. அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஜவாஹிருல்லாஹ்
தேர்ச்சி சதவீதம் 94.66 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 2014ல் தேர்ச்சி சதவீதம் 93.06 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.6 விழுக்காடு தேர்ச்சி அதிகரித்துள்ளது.
10 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
__________________________
இராமநதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும,; 28 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் மற்றும் 29 மெட்ரிக் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என மாவட்டத்தில் மொத்தம் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக பயின்று 1172 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் நேஷனல் அகடாமி மாண்டிஸோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுருதி முதலிடத்தையும், 1170 மதிப்பெண்களைப் பெற்ற இராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி எம்.மகேஷ்வரி இரண்டாம் இடத்தையும், 1168 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் ஜி.பிரகதீஷ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவ மணிகள் சாதனை
__________________________
அரசு பள்ளிகளில் இராமநாதபுரம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி என்.தங்கவேல் என்பார் 1120 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், பனைக்குளம் அரசு மகளிர் பள்ளியைச் சார்ந்த மாணவி எ.சம்சூல் ஹத்தியா மற்றும் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் எ.பழனிமுருகன் ஆகியோர் 1111 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் என்.பிரேம் சந்த் என்பார் 1110 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
வெற்றிப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இவர்கள் சாதனை பின் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
அரசு பள்ளிகளை இரண்டாம் தரமாக கருதுவோரை வாயடைக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மணிகள் சாதனை புரிய பெரிதும் உழைத்த அரசு பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மணிகள் அனைவரும் எனது இராமநாதபுரம் தொகுதியைச் சேரந்த்வர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பிற்கு பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து செயல் திட்டமும் தீட்டி செயல்படும் இராமளநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் இ.அ.ப. அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஜவாஹிருல்லாஹ்
Monday, May 4, 2015
Subscribe to:
Posts
(
Atom
)














