Saturday, February 14, 2015

கீழக்கரை தமுமுக நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தமுமுக தேர்தல் களம் 2015 கீழக்கரை 





இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்  கீழக்கரை தமுமுக நகர்  கிளை புதிய நிர்வாகிகள் தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி  மைதீன்  உலவி  அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
கீழ்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கிளை செயலாளர் -   சகோ.சிராஜுதீன்
கிளைபொருளாளர் - சகோ.செய்யது அபுதாஹிர்,
துணைசெயலாளர் - சகோ.அமீன்
                                        சகோ புஹாரி 
                                      .  சகோ நசீர்  
மற்றும் 3, 4, 7,8  அகிய வார்டு புதிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சி மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட,  செயலாளர் சகோ.அன்வர் அலி, வாணி சித்திக்,  சவுதி நிர்வாகி கீழை இர்பான், துபாய்  நிர்வாகி கோ.ஜெயினுலாபுதீன். ஒன்றிய  நிர்வாகி ரைஸ் சாதிக், முனால் தமுமுக நகர் தலைவர் அன்பில் ஹசன் மனிதநேய மக்கள்கட்சி நகர் செயலாளர் இக்பால், கோஸ்   மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள், கீழக்கரை நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர். முடிவில் நகர் கிளை செயலாளர் - சகோ.சிராஜுதீன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

Tuesday, February 10, 2015

தமுமுக தலைமை முக்கிய அறிவிப்பு


கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் பங்கேற்பு ! !




கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் பங்கேற்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம், கீழக்கரையில் 100 ஆண்டுகளுக்கும் முன்னதாக ஆரம்பப்பள்ளியாக தொடங்கப்பட்டு அதன்பின் 1981 ல் உயர்நிலைப்பள்ளியாகவும், 1990 ல் மேல் நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்ந்த
கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டு விளையாட்டுவிழா மற்றும் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.K.ஜெயக்கண்ணு M.A, M.Ed., அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.V.சாந்தி M.A, M.Ed., அவர்களும் தேசியக்கொடி ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றனர்.
ஆண்டுவிழா நிகழ்வுகள் கீழக்கரை குத்பா கமிட்டி பொருளாளரும், கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாஅத் தலைவருமான ப.அ.சேகு அபுபக்கர் அவர்கள் தலைமையிலும், ஜமாஅத் நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேராசிரியர்.முனைவர்.B.J.சாதிக் M.Sc, Ph.D, D.Sc., அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
பள்ளியின் ஆண்டறிக்கையை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜனாப்.A.முகம்மது மீராM.Com, M.Ed, M.Phil., அவர்கள் வாசித்தார்கள்.
பள்ளித்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அவர்கள் பேசும்பொழுது மாணவ, மாணவிகளே கொஞ்சம் கவனமாக கேளுங்கள், நாம் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து அரசுப்பள்ளியில் படிக்கின்றோம் என்கிற தாழ்வு மனப்பான்மை யாருக்கும் இருக்க வேண்டாம்.
ஏன் என்றால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வண்ணம் சாதனை புரிந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஏற்றம் பெற்றார்.
நம்முடைய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மதிப்பிற்குரிய A.P.J.அப்துல் கலாம் அவர்கள்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசு உதவிபெறும் ராமநாதபுரம் ஸ்குவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்து படிப்படியாக முன்னேறினார்.
அதுபோல் நமது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழக்கரை அருகில் உள்ள மாவிலாதோப்பு என்கின்ற ஊரில் நாடார் சமூகத்தினரால் நடத்தப்படும் நாடார் நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர் 2012 ல் IAS தேர்வில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் தேர்ச்சி பெற்று தற்போது ராஜஸ்தானில் IAS அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் பெயர் கோபால சுந்தர்ராஜன்.
மேலும் நமது மாவட்டத்தில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் பகுதியில் உங்களைப்போன்றே முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் அரசு உதவி பெறும் தமிழ் மீடியம் பள்ளியில் படித்த மாணவி சென்ற ஆண்டு நடைபெற்ற IAS தேர்வில் வெற்றி பெற்று புர்காவுடன் நேர்முக தேர்வை சந்தித்து, புர்கா அணிந்தவாறு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் பெயர் தமீம் அன்சாரியா இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இவர்களால் எல்லாம் முடியும் என்றால் ஏன் உங்களால் முடியாது என்று மாணவ,மாணவிகளை உற்சாகப்படுத்தி ஆர்வமூட்டினார்.
பேராசிரியர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய். 5.00 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது,
அதுபோல் கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூபாய்.15.00 லட்சம் செலவில் நிதி வழங்கி சென்ற வாரம்தான் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
அதேபோன்று பெரியபட்டிணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி,
மாயாகுளம் ஊராட்சியில், மங்களேஸ்வரி நகர் தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி,
மாயாகுளம் ஊராட்சியில், முத்துசாமிபுரம் நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி,
கோரைக்கூட்டம் தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதிகள் ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
சுருங்க சொல்லப்போனால் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதிகள் பெரும்பான்மையாக கல்வி நிறுவனங்களின் பள்ளிக்கூட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மேசை நாற்காலிகள், கழிப்பறை வசதிகள், தண்ணீர் வசதிகள் இப்படியான தேவைகளுக்காகவே முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் கடந்த மே 2011 முதல் டிசம்பர் 2014 வரையிலும் ரூபாய் . 1,13,50,000 ( ஒரு கோடியே பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ) பள்ளிக்கூடங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாத்தார்களுக்கும், இப்பள்ளி நிர்வாகஸ்தர்களுக்கும் நாமெல்லாம் இனி வரும் காலங்களில்
எப்படி கல்வி நிறுவனங்களை மிகவும் தாராள எண்ணங்களோடு நடத்தவேண்டும் என்பது பற்றிய அதுசம்பந்தமான ஒரு படிப்பினைக்குரிய நெகிழ்ச்சியான சம்பவத்தைக்கூறி அவர்களின் உரையை நிறைவு செய்தார்கள்.
( சம்பவத்தை YOU TUBE தளத்தில் காண கீழ்கண்ட LINK ஐ கிளிக் செய்து பார்க்கவும் )
சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் இப்பள்ளியின் சார்பாக நான்கு புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித்தர கோரிக்கை வைக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறும்போது மிகவும் தாமதமாக இந்த கோரிக்கை வந்துள்ளது இருப்பினும் கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்ய வழிவகை செய்யப்படும் என கூறப்பட்டது.
மேலும் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஊக்கப்பரிசுத்தொகை வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் பரிசளிப்பு நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியபெருமக்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் சகோ.அன்வர் அலி, பக்கர் அலி, பரக்கத்துல்லாஹ், பிஸ்மி, நூருல் அFப்பான்,
கீழக்கரை நிர்வாகிகள் சகோ.சிராஜுதீன், சகோ.சாதிக், சகோ.அமீன், சகோ.செய்யது அபுதாஹிர், சகோ.கீழை இர்பான், துபாய் நிர்வாகி சகோ.ஜெயினுலாபுதீன், சகோ.இக்பால் மற்றும்
திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள், கீழக்கரை நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.
முடிவில் இப்பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் ஜனாப்.S.சாகுல் ஹமீது B.Sc., M.A, M.Ed., அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

Sunday, January 18, 2015

பனைக்குளத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. அப்பொதுகூட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்பிரகடனமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுக்கூட்டத்தில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் மமக மாநில பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றீனார்கள்.

தமுமுக 2015 தேர்தல் அதிகாரிகள் பட்டியல்

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்தல் 
2015 தேர்தல் அதிகாரிகள் பட்டியல்  


Thursday, January 8, 2015

தமுமுக கழக அமைப்பு தேர்தல்

தமுமுக கழக அமைப்பு தேர்தல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அடிப்படை கிளையிலிருந்து மாநில நிர்வாகம் வரைக்கும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என கழக அமைப்பு நிர்ணய சட்டத்தில் குறிப்பிட்டுள்ளப்படி வரும்18.01.2015 முதல் 7.03.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறும். 

இதற்காக 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை தலைமை நிர்வாகக் குழு அமைத்துள்ளது. பி.எம்.ஆர். சும்சுதீன் அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக ஜெ. அவுலியா மற்றும் இராயபுரம் சிராஜுதீன் ஆகியோர் செயல்படுவார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், தேர்தலை நடத்தவும் 33 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 10.01.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு சென்னை இராயபுரத்தில் உள்ள மேஜிக் பார்க் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் நடத்தும் விதம் பற்றி விரிவாக விளக்கப்படும்.

தமுமுக தலைமையகம்

பி.எஸ். அப்துல் ரஹ்மான் - ஒரு பன்முக வள்ளல் - ஜவாஹிருல்லாஹ் MLA!


பி.எஸ். அப்துல் ரஹ்மான் - ஒரு பன்முக வள்ளல் - 

ஜவாஹிருல்லாஹ் MLA!

__________________________________________________________

எம் நேசத்திற்குரிய பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். அவர்களை எனது மாணவப் பருவத்திலிருந்தே அறிந்து வந்துள்ளேன். சென்னை வண்டலூரில் அவர்கள் கிரஸண்ட் தங்குமிடப் பள்ளியை தொடங்கிய செய்தியை அறிந்த போது அந்த பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் எனது தந்தையின் அனுமதி கிடைக்காததினால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இருப்பினும் எங்கள் மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் சார்பில் அந்த பள்ளிக்கூட வளாகத்தில் கோடை விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கான ஆளுமை வளர்ப்பு முகாம்களை அங்கு பல முறை நடத்தியுள்ளோம்.

தமிழகத்தில் எத்தனையோ கொடை வள்ளல்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் நமது சமகாலத்தில் முஸ்லிம் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை உளமாற உணர்ந்து அந்த வழியில் செயல்பட்டவர் பி.எஸ்.ஏ. அவர்கள். அவர்களுடன் நெருங்கி நேரடியாக பழகும் வாய்ப்பு எனக்கு டிசம்பர் 1997ல் ஏற்பட்டது. 1997 நவம்பர் இறுதி வாரம் கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்ட பிறகு அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை முஸ்லிம் சமுதாயம் இழந்தது. கோவை பற்றி எரிந்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு நிலவிய பதட்டச் சூழலை தணிப்பதற்காக எனது தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கோவை சென்றது. கலவரம் தலைவிரித்தாதிக்கொண்டிருந்த நிலையில் அங்கு பல நாட்கள் முகாமிட்டு கலவரம் ஏற்பட்ட சூழல், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் என அனைத்தையும் வீடியோவில் பதிவுச் செய்து பிறகு அதனை ஒரு ஆவணப்படமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்தோம். இந்த ஆவணப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது.

இந்த படம் ஒளிபரப்பான ஒரு சில நிமிடம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. மறுமுனையில் பேசியவர் நான் அப்துல் ரஹ்மான பேசுகிறேன் என்றார். ஆமாம் பி.எஸ்.ஏ. அவர்கள் தான் பேசினார்கள். கோவை கலவரம் தொடர்பான படத்தைத் தான் பார்த்ததாகவும் உடனடியாக என்னை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மறுநாள் பி.எஸ்.ஏ. அவர்களை சென்னையில் சுப்பா ராவ் நிழல் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். சந்திப்பு பல மணி நேரம் நீடித்தது. அங்குள்ள சூழல்கள் அனைத்தையும் கவலையுடன் கேட்டறிந்தார்கள்.

பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருந்தினார்கள். தனது பங்கிற்கு நான் பரிந்துரைச் செய்யும் பள்ளிக்கூடத்திற்கு வகுப்பறைகள் கட்டித் தருவதாக உறுதி அளித்தார்கள். வாக்குறுதி அளித்தப்படி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள மன்பஉல் உலூம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு தளம் முழுவதையும் கட்டிக் கொடுத்தார்கள்.

இதன் பிறகும் எங்கள் தொடர்புகள் நீடித்தன. பல முறை நேரிலும் தொலைபேசியிலும் பேசியுள்ளோம். எனது பரிந்துரையில் அடிப்படையில் சென்னை புவிருந்தவல்லியில் உள்ள அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கும் வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தார்கள். இதே போல் அவர்கள் தமிழகம் முழுவதும் கல்விக்காக செய்த தர்மம் கணக்கில் அடங்காது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மீது பி.எஸ்.ஏ. அவர்கள் கொண்டிருந்த பற்றின் காரணமாக தி ஹிந்து நாளிதழின் நிர்வாகிகளை அவர்கள் அழைத்து தமுமுகவின் செயற்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார். அவர்கள் இவ்வாறு பேசியது எனக்கு தெரியாது. ஆனால் தி ஹிந்து நாளிதழின் முதன்மை செய்தியாளர் சுரேஷ் நம்பத் என்னை அழைத்து பி.எஸ்.ஏ. அவர்கள் தங்கள் நிர்வாகத்திடம் தமுமுகவைப் பற்றி சிறப்பித்து பேசியதைப் பற்றி தெரிவித்தார். இதன் பிறகு தி ஹிந்து நாளிதழில் தமுமுகவைப் பற்றி செய்திகள் நல்ல முறையில் பிரசுமாகின.

சென்னை அண்ணா சாலையில் சீதக்காதி அறக்கட்டளை கட்டடத்தில் ஒரு தலைசிறந்த இஸ்லாமிய நூலகத்தை அவர்கள் தொடங்கியதும் மிகவும் பயனுள்ள அறப்பணியாகும். அந்த நூலகத்தினால் நான் பயனடைந்துள்ளேன். என்னைப் போல் பல ஆய்வாளர்களும் பயனடைந்துள்ளார்கள்.
இன்று பல்கலைகழகமாக உயர்ந்துள்ள கிரஸண்ட் பொறியியல் கல்லூரி முஸ்லிம்களும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நடத்த இயலும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்வியல் சாதனைகளில் ஒன்று என்றுச் சொன்னால் மிகையாகாது.

இதே போல் கீழக்கரையில் இயங்கி வரும் தாசிம் பீவி பெண்கள் கல்லூரி இன்று தேசிய அளவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இயங்கி வருவதும் பி.எஸ்.ஏ. அவர்களின் சீரிய சிந்தனைகளின் பிரதிபலிப்பாக உள்ளது.

இன்று தமிழகத்தில் அரபி மத்ரஸாக்களில் சேர்வதற்கு மாணவர்கள் கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களை தங்கள் மத்ரஸாக்களில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக ஆசிரியர்களும், நிர்வாகிகளும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் சல்லடைப் போட்டு தேடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு நேர் மாறாக கிரஸண்ட் வளாகத்தில் இயங்கும் புஹாரியா அரபிக் கல்லூரியில் பார்க்க முடிகின்றது. இங்கு சேர வரும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரும் என் பரிந்துரையை நாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான மார்க்க கல்வியுடன், பட்டப்படிப்பும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளித்த முதன்மையான அரபிக் கல்லூரியாக அது விளங்குகின்றது.

சீதக்காடி அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு சமுதாய கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் பி.எஸ்.ஏ. அவர்களின் பங்களிப்பு இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

கீழக்கரைக்காரர்கள் என்றால் ஒரு அடைமொழி தொழில் செய்பவர்கள் என்ற புரிதலை மாற்றி அமைத்தவர் பி.எஸ்.ஏ. அவர்கள். அவரது பெரும் முயற்சியில் ஒரு பன்னாட்டு நிறுவனமாக ETA எனும் எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்சி இயங்குகிறது. கட்டுமான நிறுவனம் தொடங்கி பல்வேறு பெரிய நிறுவனங்களை உருவாக்கி தமிழ் சமுதாயத்திற்கு தொழில் துறையில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் பிஎஸ்ஏ. ஈடிஏவிற்கு வளைகுடாவில் இன்னொரு பெயரும் உண்டு. E - எல்லா T தமிழ் A ஆட்கள் நிறுவனம் என்றும் சொல்லும் அளவிற்கு பல்லாயிரம் தமிழக குடும்பங்கள் முன்னேறுவதற்கான வேலை வாய்ப்பு அளிக்க வழிவகுத்தார்கள். ஒரு முறை இந்த குழுமத்தின் நிறுவனமான எம்பிஎம் யின் ஒரு பிரிவு இழப்பில் இயங்கிய நிலையில் அதன் மேலாளர்கள் அப்பிரிவை மூடி விடலாம் என்று பிஎஸ்ஏ அவர்களிடம் பரிந்துரைத்தார்கள். பிஎஸ்ஏ அவர்கள் அந்நிறுவனத்தில்பணியாற்றுபவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டார். பெரும் எண்ணிக்கையில் உள்ளார்கள் என்றும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் என்று மேலாளர்கள் குறிப்பிட்டார்கள். உடனடியாக இத்தனை குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அந்த பிரிவு இழப்பில் இயங்கினாலும் பரவாயில்லை: அதனை மூட வேண்டாம் என்று உத்தரவிட்டார். அந்த அளவிற்கு ஏழை மக்கள் மீது கரிசனம் காட்டும் பண்புடைய வள்ளல் பிஎஸ்ஏ அவர்கள்.

தமிழகத்தில் நமது சமகாலத்தில் பல கொடை வள்ளல்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் பி.எஸ்.ஏ. தனி ரகம். காரணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தைக் கரம் பிடித்து உயர்த்தி விட வேண்டும் என்பதே அவர்கள் சிந்தனையாக செயல்திட்டமாக இருந்தது. அவர்களது கல்வி பணி நிச்சயமாக மரணத்திற்கு பிறகும் பயன் தரும் சதக்கத்துல் ஜாரியாவாக -நிரந்தர நல்லறமாக அமைந்துள்ளது. அவர்கள் வழியில் அவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து நற்பணிகளை தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

Jawahiru