Saturday, September 26, 2009

நான் ஏன் செருப்பை வீசி எரிந்தேன்?


நான் ஏன் செருப்பை வீசி எரிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்தகுற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது..

நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.நன்றி – http://porattamtn.wordpress.com/

Tuesday, September 22, 2009

கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் திங்கள்கிழமை ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது

கீழக்கரை, செப். 21: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் திங்கள்கிழமை ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள மொத்தம் 8 ஜமாத் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், ரம்ஜான் பெருநாள் சிறப்புத் தொழுகை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. கீழக்கரை பெரிய ஜூம்மா மசூதி, பழைய குத்பா பள்ளி மசூதி, கிழக்குத் தெரு அப்பா பள்ளி மசூதி, தெற்குத் தெரு பள்ளி மசூதி, மேலத்தெரு புது பள்ளி மசூதி ஆகிய மசூதிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை, பெருநாள் குத்பா பேருரையும் நடைபெற்றது. மேலும், கே.இ.சி.டி. ஈத்கா மைதானம் மற்றும் பல இடங்களில் ஜூம்மா பேருரை நடைபெற்றது. காலை 11 மணிக்கு மேல் அனைத்து ஜமாத்தினர்களும் சம்பிரதாய முறைப்படி பெரிய ஜூம்மா பள்ளியில் ஒன்று கூடி ஜூம்மா குத்பாவில் கலந்துகொண்டனர். நடுத்தெரு ஜூம்மா பள்ளியில், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் உசைன் தலைமையில் தொழுகை நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சேர்த்து 5000-க்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும், வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பெருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், கே.இ.சி.டி. அறக்கட்டளை மூலமாக அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் அடங்கிய பைகள் 1000-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.

Monday, September 21, 2009

எனது இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்

Sunday, September 20, 2009

கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி





19/9/2009அன்று கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கீழக்கரை கடற்கரை பள்ளி வழக்கத்தில் நடைபெற்றது.கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டவர்கள் . இன் நிகழ்ச்சிக்கு ராமநாட கீழக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக்,மாவட்டசெயலாளர் தச்பிகு,மற்றும் கீழக்கரை பொறுப்பாளர் ஜெய்னுல்ஆப்தீன், முஸ்தகீன், உஸ்மான, மற்றும் ஆய்பு, அகரம், சாதக,குர்சித், ஹமாத் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டவர்கள்

Saturday, September 19, 2009

CBI யின் வசம் ஒப்படைக்கப்படும் ஷோபியான் வழக்கு - நீதி கிடைக்குமா???


ஷோபியானில், ராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்கள் நிலொஃபர்(22), ஆசியா(17) அவர்களின் வழக்கு CBI யின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கை முன்னதாக விசாரித்து வந்த காஷ்மீர் போலீஸார் இந்த வழக்கு சார்ந்த விசாரணைகளில் பெரும் குழப்பங்களையும் மோசடிகளையும் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பவே இந்த விசாரணையை CBI யின் வசம் ஒப்படைக்க ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்தது.

CBI யின் இயக்குனர் அஷ்வாணி குமார் இதுபற்றி கூறுகையில், "CBI இந்த வழக்கை எடுப்பதற்கான தன்னுடைய நிலை பற்றி அரசிடம் தெளிவு படுத்திவிட்டது. மேலும் இந்த வழக்கு CBI யிடம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றிய முடிவை நாங்கள் அரசிடம் விட்டுவிட்டோம்" என்று கூறினார்.

ஜம்மு பெராமல்லிருந்ததை அரசு, தான் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் பெறாமலிருந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 9 ல் மத்திய அரசை தொடர்பு கொண்டு இந்த வழக்கை விசாரிக்க CBI க்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டது.

மேலும் ஜம்மு அரசு உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை CBI யின் வசம் ஒப்படைக்க போவதாகவும், இதனால் அரசுக்கு எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை என்றும், மேலும் வழக்கின் முன்னேற்றத்தை அது தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும் கூறியுள்ளது.