Sunday, December 6, 2015

சென்னை வில்லிவாக்கம் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் இராமநாபுர சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள்





சென்னை வில்லிவாக்கம் சிட்கோநகர் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு, நிலைமைகளை களத்தில் முழுநேரமாக இருந்து கவனித்து செயலாற்றி வரும் தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தாஹா நவீன், பகுதி நிர்வாகிகள் மற்றும் இபுறாகிம், சிந்தா, தீன், ஜலீல், சாதிக் மற்றும் கீழை ஹசன்  உட்பட்டவர்களிடம் விரிவாக கேட்டு மனச்சோர்வின்றி பணியாற்ற ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மதிய உணவு, பிரட், தண்ணீர், பிஸ்கட்டு பாக்கட்டுகளை வழங்கினார்ர்கள்

நியூஸ்
கீழை ஹசன 

Monday, November 30, 2015

கீழக்கரை தமுமுகவின் டிசம்பர் 6 அழைப்பு


கீழக்கரை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே மதசார்பற்ற தேசத்தின் சகோதர உறவுகளே எதிர்வரும் டிசம்பர் 6 இந்தியாவின் மானம் உலக அரங்கில் அசிங்கப்பட்ட நாள் ஆம் 300 ஆண்டுகால இந்தியாவின் வரலாற்று சின்னமான பாபர் மசூதி காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள் ஒவ்வரு வருடமும் டிசம்பர் 6ல் மீண்டும் அதே இடத்தில் அல்லாஹ்வின் பள்ளி கட்டப்படும்வரை எதிர்கால நமது சந்ததிகள் மறக்காமல் இருப்பதற்காக தமுமுக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவது உங்களுக்கு தெரியும் 2015 டிசம்பர் 6 அன்று ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு காலை 10 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு கீழக்கரை நகரில் வாழும் அணைத்து இஸ்லாமிய சொந்தங்களும் திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது கீழக்கரை நகர் தமுமுக அன்று காலை 9.30 மணி அளவில் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடையில் இருந்து வாகனங்கள் புறப்படும்

இப்படிக்கு 
கீழக்கரை தமுமுக நகர் செயலாளர்
முஹமது சிராஜுதீன் 

Friday, November 20, 2015

டிசம்பர் -6 தமுமுக தலைமையில் போராட்டம் நடைபெறும் மாவட்டங்கள்



கீழக்கரை தமுமுகவிண் இரங்கல் அறிக்கை

கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை டைரக்டர் டாக்டர் செய்யது அப்துல் காதர் அவர்கள் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம் இருப்பினும் பிறக்கும் அணைத்து உயிர்களும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என்பது இறைகட்டளை 2013ம் ஆண்டு கீழக்கரை தமுமுக சார்பாக சாலைபாதுகாப்பு வாரம் நடத்தினோம் அதில் ஒரு குறும்படம் எடுத்தோம் அப்படத்தில் டாக்டர் அவர்கள் இயற்கையாக மிகவும் இயல்பாக நடித்துகொடுத்தார்கள் அது இன்றுகூட எங்களுக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது டாக்டர் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லாம் வால் அல்லாஹ்விடம் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கீழக்கரை நகர் நிர்வாகிகளும் மனிதநேய மக்கள் கட்சியின் கீழக்கரை நிர்வாகிகளும் துவா செய்வதுடன் டாக்டர் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக என்று கூறி எங்கள் வேதனையை பகிர்ந்து கொள்கிறோம்.
 அன்புடன்

 எஸ்.முஹமது சிராஜுதீன் 
 தமுமுக நகர் செயலாளர்
 கீழக்கரை


Thursday, October 15, 2015

‪‎மனிதநேய மக்கள் கட்சியின்‬ ‪மாநில_நிர்வாகிகள் நியமனம்‬ ! !


#மனிதநேய_மக்கள்_கட்சியின் ‪#‎தலைவர்‬ பேராசிரியர்‪#‎எம்_எச்_ஜவாஹிருல்லா‬ எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் கடந்த அக்டேபார் 13 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
பின்வருவோர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
 பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் (திருச்சி மாவட்டம்)
எஸ்.எம். ஜெய்னுல்ஆபிதீன் (இராமநாதபுரம் மாவட்டம்)
கோவை எம்.ஏ.செய்யது (கோவை மாவட்டம்)
பி. ஜோசப் நொலஸ்கோ (தூத்துக்குடி மாவட்டம்)
கே. முஹம்மது கவுஸ் (மதுரை மாவட்டம்)
அ. அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. (வேலூர் மாவட்டம்)வழக்குறைஞர் ஆர். சரவணபாண்டியன் (தஞ்சாவூர் மாவட்டம்)
‪#‎எம்_யாக்கூப்‬(காஞ்சிபுரம் மாவட்டம்)
மாயவரம் ஜெ.அமீன் (நாகப்பட்டிணம் மாவட்டம்)
வழக்குறைஞர் தஞ்சை பாதுஷா (தஞ்சாவூர் மாவட்டம்)

‪#‎தலைமை_நிலையச்_செயலாளர்‬:
எம். ஹுசைன் கனி (இராமநாதபுரம் மாவட்டம்)

கடந்த அக்டோபர் 6 அன்று நடைபெற்ற தலைமை பொதுக்குழுவில்
ப. அப்துல் ஸமது பொதுச் செயலாளராகவும், ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமை நிர்வாகிகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவர்; ஒருவர் பொறியாளர்; இருவர் வழக்குறைஞர்கள்;
இருவர் பட்டதாரிகள் ஆவர்.
இவண் : எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர், 
மனிதநேய மக்கள் கட்சி

Sunday, October 4, 2015

கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது





 04:10:2015 அன்று தமுமுக இராமநாதபுரம்(கிழக்கு)மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது...கிராத்;ஹனிப் ரஷாதி(தமுமுக மாவட்ட உலமா அணி) வகுப்படுத்து சிறப்புரை;போரசிரியர்;ஹாஜா கனி(மாநில செயலாளர்,தமுமுக) மற்றும் அப்துல் ரஹ்மான்(இஸ்லாமிய அழைப்பாளர்),பாம்பன் தாஹிர் சைபுதீன்(இஸ்லாமிய அழைப்பாளர்) உரையாற்றினார்கள்...இதில் தமுமுக தென்கிழக்கு மண்டலம் தேர்தல் அதிகாரி வாணி சித்திக்,மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மமக  மாவட்ட செயலாளர்  அன்வர் அலி,மாவட்ட மாணவரணி புர்கான் மற்றும் தமுமுக மாவட்ட,அணி,ஓன்றிய,கீழக்கரை நகர் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்......