Wednesday, September 3, 2014

கீழக்கரை நகர தமுமுக சார்பில் பொதுக்கூட்டம்








இராமநாதபுரம் கிழக்கு கீழக்கரை தமுமுக சார்பில் 1/9/2014 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் வரலாற்று உணமைகளை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

மாவட்ட தலைவர் சகோதரர் தொண்டி சாதிக்,மாவட்ட செயலாளர் தேவிபட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் சகோதரர் ஜாகீர் ஹுசைன்,பொருளாலர் சகோதரர் வானி சித்திக் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்

Wednesday, August 27, 2014

கீழக்கரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 15,00000 ( பதினைந்து லட்சம் ) செலவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிட வேலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்தபோது.

கீழக்கரை தமுமுக நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.

கீழக்கரை  தமுமுக நடத்தும்  31.08.2014 மாலை 6:30 மஃரிப் தொழுகைக்குப்பிறகு கீழக்கரை நகர் நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.
தலைமை : M.சாதிக் பாட்சா மாவட்ட தலைவர்.
வரவேற்புரை : S.முஹம்மது சிராஜுதீன் நகர் தலைவர்.
சிறப்புரை : சகோ.கோவை செய்யது அவர்கள் மாநில செயலாளர் தமுமுக.
சகோ.ஜாஹிர் ஹுசைன் மாவட்ட செயலாளர் மமக (தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் )
நன்றியுரை : சகோ.அன்பின் ஹசன் அவர்கள் (மூத்த தலைவர் கீழக்கரை நகர் தமுமுக)
பாலஸ்தீனத்தில் நடக்கும் அநீதியை அறிந்திட அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது தமுமுக , கீழக்கரை நகர், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.

Saturday, July 26, 2014

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

Wednesday, July 23, 2014

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். . . த மு மு க கடும் கண்டனம்

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். 
. . த மு மு க கடும் கண்டனம் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை 

டெல்லியில் உள்ள மகராஷ்டிரா மாநில இல்லத்தில் உணவு வழங்கல் மேற்பார்வையாளராக பணியாற்றும் அர்ஷத் என்ற சிறுபான்மை சகோதரர் மீது சிவசேனா எம்பிக்கள் வெறித்தனமாக, நாகரிக வரம்பு மீறி நடந்து கொண்டதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகளும், பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாத காட்டுமிராண்டி தனமானதாகும் இது வன்மையாக கண்டிக்க தக்கது, 
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளில் இது விவாதமாக மாறி இருக்கிறது.
ரமலான் நோன்பு வைத்து இருக்கும் உணவு வழங்கல் மேற்பார்வையாளர் அர்ஷத் க்கு சிவசேனா எம்பிக்கள் கட்டாயப்படுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்துள்ளதாக வெளியான தகவல் நாடுமுழுவதும் வாழும் அமைதி விரும்பும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து குடிமக்களுக்கும் முன்மாதிரியாக திகழவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விதம் வரம்பு மீறி நடந்து கொள்வது நாகாரீக உலகில் இந்திய திருநாட்டின் பெருமையை குலைத்து விடக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சம்பந்த பட்ட எம்பி வரம்பு மீறிய செயல் வீடியோ ஆதாரங்களாக வெளி வந்து இருக்கும் நிலையில் மத்திய அரசும் , நாடாளுமன்ற சபாநாயகரும் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குற்றம் இழைத்த சிவசேனா எம்பிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

ஜே எஸ் ரிபாயி 

தலைவர் தமுமுக

Monday, July 21, 2014

குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்த இராமநாதபுரம் தமுமுக



இன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் சாலைத்தெரு அருகில் ரோமன் சர்ச் பின்புறம் பிறந்து 3 நாளே ஆன பெண் குழந்தை யாரோ விட்டு சென்றனர் இதை பார்த்த பொதுமக்கள் தமுமுக விற்கு தகவல் கொடுத்தனர் உடனே சம்பவ இடத்திர்க்கு சென்ற தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மாவட்ட மருத்துவ சேவை அனி செயலாளர் யாசர் அரபாத் ஒன்றிய தலைவர் பாக்கர் அலி அவர்கள் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனை மூலமாக குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்