Friday, December 11, 2009

Monday, December 7, 2009

தமுமுக முயற்சியால்; I.N.T.J-வினர் விடுதலை


E-mailPrintPDF

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 17 வது ஆண்டு தினமான டிசம்பர் 6 அன்று சென்னையில் உள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.எம். பாக்கர் தலைமையிலான இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் காலையில் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். வழக்கம் போல் இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடிவுச் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை மாலை 6 மணியளவில் காவல்துறை செய்வதற்கு தொடங்கியது. இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிற்குச் செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். ஆனால் பெண்கள் மறுத்துவிட்டு உறுதியாக இருந்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடமும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொண்ட தமுமுக தலைவர் அடையாளபூர்வமாக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களை சிறையில் அடைத்தால் அது பெரும் அநீதியாகும் என்று குறிப்பிட்டார். உள்துறை அமைச்சரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதால் நாங்கள் அவர்களை சிறையில் அடைக்கின்றோம். நாளை அவர்கள் பிணையில் வெளியில் வந்து விடலாம் என்று காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வள்ளுவர் கோட்டம் அருகில் ஐ.என்.டி.ஜே.வினர் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி பள்ளிக்கு அருகில்; தென்சென்னை மாவட்டத் தலைவர் சீpனி முஹம்மது தலைமையில் தமுமுவினர் பெருமளவில் கூடினர். தொடர்ந்து தமுமுக தலைவர் உயர் காவல் அதிகாரிகளிடம் கைதுச் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இச்சூழலில் இரவு 8.15 மணியளவில் கைதுச் செய்யப்பட்ட பாக்கர் தலைமையிலான அனைவரும் விடுதலைச் செய்யப்படுவதாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் உயர் காவல் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். அதன் பிறகு அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை தொடர்புக் கொண்ட எஸ்.எம். பாக்கர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டார். கைதான பெண்களும் சிறைக்குச் செல்ல உறுதியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
LAST UPDATED ( SUNDAY, 06 DECE

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Saturday, December 5, 2009

கோவையில் மருத்துவமனை துவக்கம் ..........

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்


குனியமுத்தூர் நகரம் 2வது வார்டு கிளையின் சார்பாக


மர்ஹீம் மெளலவி அப்துல் ரஹிம்

மருத்துவமனை

அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவையில்....

நாள் : இன்ஷா அல்லாஹ் 04 - 12 - 09 வெள்ளிக்கிழமை
மாலை : 6 -00
மணி
இடம் : த மு மு க அலுவலகம், குனியமுத்தூர்,
தலைமை : இப்ராஹிம்மாவட்ட செயலாளர், மருத்துவ சேவை அணி
வரவேற்புரை : பாருக்குனிசை நகர த மு மு க தலைவர்

மருத்துவமனை அர்பணித்து சிறப்புரை
சகோ. எஸ் . ஹைதர் அலி அவர்கள்

மாநில பொதுச் செயலாளர், த மு மு க

எழுச்சியுரை


சகோ. இ . உம்ர் அவாகள்

மாநில செயலாளர், த மு மு க

சகோ. கோவை செய்யது அவர்கள்

மாநில துனைச் செயலாளர், த மு மு க

வாழ்த்துரை


திரு, வேலுமணி. M L A

அ தி மு க, சட்டமன்ற உறுப்பினர்

திரு, டாக்டர். சிவப்பிரகாசம் M. B. B. S. D. A

கோவை அரசு மருத்துவமனை R. M. O


நன்றியுரை

பஷிர்
கிளை செயலாளர். த மு மு க

வேதாரண்யம் பள்ளி குழந்தைகள் வேன் விபத்து மீட்பு பணியில் தமுமுக

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மழலை பள்ளியை வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு காலை பள்ளிக்கு சென்ற நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.


இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 குழந்தைகள் அருகே உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்தவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தமுமுக மற்றும் ம.ம.க தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர்.



இந்த விபத்து வேன் ஒட்டுநர் அலைபேசியில் கவனக்குறைவால் (செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால்) ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விரிவான செய்திகள் இன்ஷா அல்லாஹ்