Sunday, November 15, 2009

தினமணியின் பார்வையில் தமிழகம் முழுவதும் டிச.6-ல் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் டிச.6-ல் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமுமுக மாநில செயலர் கோவை உமர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில செயலர் கோவை உமர் பின்னர் செய்தியா ளர்களிடம் கூறியது:

பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ல் ஆண்டு தோறும் தமுமுக சார்பில் கண்டனக்குரல் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அறிக்கை தயார் செய்த லிபரகான் ஆணையம் இதுவரை அதை 64 முறை புதுப்பித்து தற்போது மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. இந்த அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கிலுள்ள குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி டிச.6-ல் தமிழகம் முழுவதும் பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். திருப்பூரில் மேட்டுப்பாளையம் பஸ்நிறுத்தத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை இப்பேரணி நடக்கும். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். நிர்வாகி ஜெய்னூலாப்தீன், மாவட்ட செயலர் நஷ்ருதீன், தலைவர் யூசுப், மனித நேய மக்கள் கட்சி மாநகர செயலர் அக்பர்அலி, மாவட்ட செ யலர் ஹாலிதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Saturday, November 14, 2009

பரமக்குடி மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் இடம்

பரமக்குடியை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்ற மாணவர் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்பட்ட செய்தியை மக்கள் உரிமையில் (06 26) வெளியிட்டிருந்தோம். இது குறித்து ராமநாதபுரம் ஐக்கிய செயலாளர் ஆலம் தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீனை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரினார். அவர் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வின் கவனத்தற்கு எடுத்துச் சென்றார்.
தமுமுக தலைவர் உடனடியாக மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட சீட்டை வழங்கவும் கோரினார். இதனையடுத்து 11.11.2009 அன்று மூகாம்பிகை மருத்துவக் கல்லூரிலேயே அம்மாணவருக்கு இடமளிக்க கல்லூரி சார்பில்த நீதிமன்றத்தல் உறுதி அளிக்கப்பட்டது. அடுத்த நாளே மாணவர் கல்லூயில் சேர்க்கப்பட்டார்.

த.மு.மு.கவின் இம்முயற்சிக்கு மாணவர் ஷேக் அலாவுதீன் குடும்பத்தினரும் இராமநாதபுரம் ஐக்கிய ஜமாத் செயலாளர் ஆலமும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Friday, November 13, 2009

கோவை வணிக வளாக வெடிகுண்டு வழக்கு
அல்-உம்மா தலைவர் அன்சாரி உட்பட 10 பேர் விடுதலை தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பு

கோவை, நவ. 12லி கோவை கிளாசிக் டவர் அருகே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி உட்படட 10 பேரை விடுதலை செய்து தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிளாசிக் டவர் அருகில் புதரில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி, சேட்டு என்ற சாந்துமுகம்மது, அப்துல் ஒசீர், முகம்மது பாசித், ஜஹாங்கீர்,யூசுப் ஷாஜகான், முகம்மது அலிகான் குட்டி, சம்ஜத் அகமது, நவாப்கான், ரியாசுல் ரகுமான். ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவாகள் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.கோவை தனி நீதிமன்றத்தில் வழக்ககு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் 42 பேர் சாட்சியம் அளித்தினர். இந்த வழக்கில் நீதிபதி கணேசன் இன்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சரிவர குற்றங்கள் நிருபிக்கப்படாதால் 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த 10 பேரும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். இதில் யுசுப் ஷாஜகான் மட்டும் தண்டனை முடிந்து விடுதலையானார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, November 11, 2009

காணமல் போன சிறுவனை மீட த மு மு க



(11/11/2009) கீழக்கரை. புது தெருவை சார்ந்த இம்ப்ரன் (8) அன்று காலை 11 மணிக்கும் தன வீட்டை விட்டு போன சிறுவனை காணவில்லை.
பின்பு பரமக்குடி த மு மு க நிர்வாகிகள் அந்த சிர்வனை மீடு கீழக்கரை த மு மு க நிர்வாகிகள் ஜெய்னுல்ஆப்தீன், முஜீப் ரகுமான், கபீர் மற்றும் பரமக்குடி நகர் தலைவர் கலீல் ஆகியோர் முன்னிலையில் தாய் இடம் சிறுவன் இம்ப்ரனை ஒபடைத்தனர்.

Sunday, November 8, 2009

கேரள அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கேரள அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கம்பம்,நவ.7: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் கம்பத்தில் ஏ.கே.ஜி. திடலில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் முஹமதுசாதிக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அஜ்மீர்கான்ஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மாநில துணைச் செயலாளர் தமிமுன்அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் முஹமது கொளஸ் கேரள அரசைக் கண்டித்துப் பேசினர். தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் கேரள அரசுக்குப் புதிய அணை கட்ட நில அளவீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை கேரள அரசு கைவிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். மீறினால் கேரளத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மறைத்தும், உணவுப் பொருள்களைத் தடுத்தும் போராட்டம் நடத்துவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 5மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

Saturday, November 7, 2009

மண்டபம் பகுதியில் மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது





ராமமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து செல்லும் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கண் மூடித்தனமாக தாக்கி வருகிறார்கள். இதை கண்டித்தும் மண்டபம் பகுதியில் ம.ம.க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லா கான் தலைமை தாங்கினார்.கண்டன உரை ம.ம.க பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தலைமை கழக பேச்சாளர் சம்சுதீன். இராமநாதபுரம் மாவட்டம் த மு மு க நிர்வாகிகள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.