Saturday, June 13, 2009

கீழக்கரை நகர தமுமுக சார்பில் சுமார் 400 மாணவர்கள் மாணவிகள் கல்வி (நோட்)உதவிகள் வழங்கப்பட்டன




கீழக்கரை நகர தமுமுக சார்பில் சுமார் 400 மாணவர்கள் மாணவிகள் கல்வி (நோட்)உதவிகள் வழங்கப்பட்டன. கல்வி உதவிகளை மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி. தமுமுக துபாய் பொறுப்பாளர் முஜீப் ரகுமான் கீழக்கரை நகர தமுமுக பொறுப்பாளர் ஜெயினுல் அப்தீன வபஷா ஜலால் முஸ்தகீன் உஸ்மான் ஆய்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Wednesday, June 10, 2009

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


இராமநாதபுரதம் மாவட்டம் புதுவலசையில் தமுமுகவின் சார்பாக 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இதனை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்த ஆம்புலன்ஸை புதுவலசை தாஸின் அறக்கட்டளையின் நிறுவனர் தாஸின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷர் மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது புதுவலசை கிளையின் சார்பாக கல்வி உதவிகளும் வழங்கப் பட்டன.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Monday, June 8, 2009

இராமநாதபுரத்தில் நகர் தமுமுக சுமார் 250000rs கல்வி உதவி




இராமநாதபுரத்தில் நகர் தமுமுக சுமார் 250000rs கல்வி உதவி கொடுக்க மாணவிகள் மாணவர்கள் பயன் ஆடை இந்தனை . பொருள்கல் வாளைன்குன (டிரஸ், பாக், நோட் புக்ஸ் பெண், பென்சில்) ஆகிய வாளைன்குன .தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர்அலி. சலிமுல்லாகான்.தமுமுக ம த ,சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்

Sunday, June 7, 2009

தமுமுக சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு உதவி

கோவை மாவட்ட த மு மு க. சார்பில் 2-6-2009 அன்று கோவை அரசு மருத்துவமனைக்கு ருபாய் 25,000, மதிப்புள்ள நோயாளிகளுக்கான படுக்கை மெத்தைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில்.த மு மு க. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அசரப் தலைமையில் நடந்தது.இதில் மாநில செயலாளர் கோவை உம்மர் அவர்கள் நோயாளிகளுக்கான மெத்தைகளை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரனிடம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் பசிர் அகமது. மாவட்ட செயலாளர் ஹமிது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ். துனை செயலாளர் ஷாஜகான்.மற்றும் ம ம க இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ். கோவை தங்கப்பா. கவிஞர் ஹக். நுர்தின்.
ஜாபர்சாதிக் .ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.
செய்தி படம், கோவை தங்கப்பா

ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - மமக

சென்னை, ஜுன்.7- முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையை காக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் வகுப்புக்கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது என்ற அம்சத்தை வரவேற்கிறோம். அதேநேரம் முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவது பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தமளிக்கிறது. அந்த பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை கிடைக்க இந்திய அரசு முழுமையான முயற்சி எடுக்க வேண்டும்.

வாக்குசீட்டு முறை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையத்தின் மவுனம் வேதனையை ஏற்படுத்துகிறது. மீறினால் தண்டனை இல்லை எனும் போது சட்டங்கள் அர்த்தமிழந்து போய்விடும். எனவே, தேர்தல் விதி மீறல்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்றி மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் வாக்குசீட்டு முறையை கொண்டுவர அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டும், கொண்டுவராவிட்டால் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் சிறுவியாபாரிகள்

மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டிப்பதுடன் இக்கலவரத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை புதுப்பேட்டை, தாம்பரம், பூக்கடை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் சிறுவியாபாரிகள் ஒடுக்கப்பட்டதையும் அவர்களின் சிறுகடைகள் சூறையாடப்பட்டதையும் கண்டிப்பதோடு, இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Wednesday, June 3, 2009

பாபர் மஸ்ஜித் வழக்கு ஆவணங்கள் மாயம்

புது தில்லி :பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் 2002 முதல் எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் பல உத்தரவிற்குப் பின்னும், உ.பி அரசின் முதன்மை செயலாளருக்கும், பைஸாபாத் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் சம்பவத்தன்று நடைபெற்ற உரையாடலை இன்று வரை சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

1949 இல் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை உடனே அகற்றும்படி அன்றய பிரதமர் நேரு அன்றய உ.பி மாநில முதல்வருக்கு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை.

2002 முதல் பலமுறை ஆணை பிற்ப்பித்தும், 1949 இல் நடைபெற்ற கடித பரிவர்த்தனையை உ.பி அரசு சமர்ப்பிக்காமல் இழுத்தடித்த காரணத்தால், சிறப்பு நீதிமன்றம் கடுமை காட்டியதன் பின், கடந்த வாரம், சிறப்பு நீதிமன்றத்தில் சமூகமளித்த உ.பி அரசின் முதன்மை செயலாளர் "அது போன்ற எந்த ஆவணமும் இல்லை" என வாக்குமூலம் அளித்தார். இத்தகவலை, இந்த வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல்கள் முஸ்தாக் அஹமத் ஸித்தீக் மற்றும் ஸ்பரியாப் ஜிலானி தெரிவித்தனர்.

கோர்டுக்கு வந்த முதன்மை செயலாளர் கொண்டு வந்த கோப்புகளில், பைஸாபாத் மாவட்ட நீதிபதி அரசின் முதன்மை செயலாளருக்கு எழுதிய அனைத்து கடிதங்களும் இருந்தாலும், முதன்மை செயலாள்ர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய எந்த ஒரு கடிதத்தையும் காணவில்லை. அத்தோடு நேரு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை -- என்றும், முஸ்தாக் குறிப்பிட்டார்.

ஆவணங்கள் காணாததால் கோபமடைந்த நீதிபதி, விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததுடன், அன்றய தினம் அவசியம் காணாமல் போன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கண்டிப்புடன் ஆணையிட்டுள்ளார்.